Friday, April 26, 2024

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிர்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர்களும், அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களும் இந்த சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து அவர்கள் மீது கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களும் இந்த சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து அவர்கள் மீது கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு மேலும் பலத்த எதிர்ப்பு கிளம்ப, தமிழக கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கினர்.

இதனையடுத்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நேற்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு முத்துபேட்டை மொய்தீன் பள்ளி தலைவர் ராவுத்தர் அவர்கள் தலைமை தாங்க, திமுக மாவட்ட துணை செயலர் M.S. கார்த்திக், முத்துபேட்டை தர்கா மேனேஜிங் ட்ரஸ்டி S.S. பாக்கர் அலி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், ஆதி தமிழர் பறவை நிறுவனர் சதாசிவம், நாம் தமிழர் கட்சி செல்வம், மனித நேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் தீன் முஹம்மது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முகைதீன் அடுமை, தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணியின் சேக் பரீத், SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக், அதிரை A.J. ஜியாவுதீன், தமுமுக சம்சுதீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக முத்துபேட்டை முகைதீன் பள்ளியிலிருந்து பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 3000 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என திரளாக கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...