Saturday, March 21, 2026

SDPI தேசிய துணைத்தலைவருக்கு டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த கல்யாண்ராமனை கைது செய்ய SDPI வலியுறுத்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img


நாட்டினுடைய மதசார்பின்மையை காக்கும் நோக்கோடு தேசம் முழுவதும் செயல்பட்டுவரக்கூடிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்களை கடந்த 21.03.2020 அன்று பாஜக-வை சேர்ந்த நிர்வாகியான கல்யாணராமன் என்பவர் தன்னுடைய (@KalyanBJP) சமூக ஊடக டிவிட்டர் கணக்கிலிருந்து “பழனிபாபாவின் நிலைமை தெக்லாண் பாகவி வந்துவிடக்கூடாது என்பது தான் நான் வணங்கும் மாகாளி பராசக்தி நோக்கி நான் வைக்கும் பிரார்த்தனை” என்பதாக எங்கள் கட்சியின் தேசிய துணைத் தலைவர் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய விதமாக அவர் எழுதி இருக்கிறார்.

பழனிபாபா அவர்கள் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு சிறுபான்மை சமூகத்தின் தலைவர். அவர் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலரால் படுகொலை செய்யப்பட்டு இறந்தார் என்பது நாடறிந்த விஷயமாகும். எனவே பழனிபாபா போன்று எங்கள் கட்சியைச் சேர்ந்த தேசிய துணைத் தலைவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகவே பழனிபாபா போன்று கொலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கத்தில் வன்முறையை தூண்டியும், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவரின் பெயருக்கு களங்கம் விளைவித்தும், தமிழகத்தில் மத பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தொடர்ந்து சமூக பதட்டத்தை ஏற்படுத்தி, டிவிட்டரில் பதிவு வெளியிட்டுவரும் கல்யாணராமன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சென்னை காவல் ஆணையர் அவர்களை எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா தலைமையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், வழக்கறிஞர் ராஜா முஹம்மது, மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.வி.ராஜா ஆகியோர் சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினர். இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் ஆணையர் அவர்கள் உறுதியளித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img