கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிரைக்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக அதிரையில் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. அதேசமயம் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு ஏ யாரும் செல்ல கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.