கொடறாச்சேரி அருகே உள்ள அபிவிருத்திசொரத்தை சேர்ந்த ஹாஜா முகைதீன், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் இயங்கிவந்த மிரிச் மசாலா உணவகத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார். அப்போது அதிரையர்களுக்கும் பட்டுக்கோட்டைவாசிகளுக்கும் மிகவும் பரிச்சியமானார். இந்நிலையில் சமீபத்தில் கனடாவுக்கு சென்ற இவர், உடல்நல குறைவால் காலமானார். சித்திக், சாகுல் ஹமீது ஆகியோரின் தந்தையான ஹாஜா முகைதீன், நமதூர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் நூர் முகம்மதுவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.