தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பட்டுக்கோட்டை சவுக் காண்டி தெருவில் உள்ள ரஸ்க்பேட்டரி மாலை 5 மணிக்கு மேல் திறந்து இருந்ததால் காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் நகர வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் 5 மணிக்கு மேல் நகரப்பகுதியில் தேவையில்லாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களை காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்தார்.