Saturday, February 7, 2026

மதுக்கூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றிய சேர்மன் அமுதா செந்தில் தனது ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

மதுக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி அப்பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்க தனது நிதியிலிருந்து வாங்கப்பட்ட உபகரணங்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி வி சேகர் மற்றும் அமுதா துரை செந்தில் ஆகியோர் அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.

மேலும் ஒன்றிய சேர்மன் அமுதா துரை செந்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் வரவழைத்து அவர்களிடம் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டன. புதிதாக வாங்கப்பட்ட கிருமி நாசினி மருந்து தெளிக்கும் உபகரணங்கள் மூலம் சட்டமன்ற உறுப்பினர் சி வி சேகர். மற்றும் ஒன்றிய சேர்மன் அமுதா துரை செந்தில் மதுக்கூர் யூனியன் அலுவலகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img