Home » பேராவூரணி தாலுகாவில் மதுக்கடை திறக்க TNTJ எதிர்ப்பு…!

பேராவூரணி தாலுகாவில் மதுக்கடை திறக்க TNTJ எதிர்ப்பு…!

by admin
0 comment

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்காவில் மதுக்கடை திறக்க வேண்டாம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணம் கிளை சார்பில் பேராவூரணி வட்டாட்சியரிடம் நேரில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இச்சந்திப்பில் வட்டாட்சியரிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கூறியது என்னவென்றால்

கொரோனா பாதிப்பு குறைந்த காலகட்டத்தில் கடுமைகாட்டிய அரசு தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் போது மனித உயிரை குடிக்கும் மதுக்கடையை திறப்பது நல்லதல்ல எனவும்,

வழிபாட்டுத்தளம்,வணிக வளாகம் என மக்களின் அத்தியாவசிய இடங்களை திறக்காமல் தடை விதித்துவிட்டு கடந்த நாற்பது நாட்களாக மதுவாடை இல்லாமல் பழகிய மக்களிடம் நெருக்கடியான காலத்தில் வழிய திணிப்பது நல்லதல்ல எனவும்,

இத்துனை நாட்கள் உயிரை பணையம் வைத்து களத்தில் நின்ற காவல்துறை,சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையை கொச்சைப்படுத்தும் நடவடிக்கை எனவும் எடுத்துச்சொல்லப்பட்டது.

எனவே பேராவூரணி வட்டாரப் பகுதியில் மக்கள் நலன் கருதி மதுக்கடையை வழக்கம்போல் தடை செய்ய வேண்டும் என தங்களிடம் சமூக நலன் கருதி கேட்டுக்கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter