Wednesday, March 18, 2026

முத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

முத்துப்பேட்டையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி சம்பந்தமாக, இறைச்சியின் விலையை குறைத்து சரியான விலையை நிர்ணயிக்குமாறு முத்துப்பேட்டை மக்கள் சார்பாக கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து கறிக்கடை உரிமையாளர்களை தனித்தனியே அழைத்து கூட்டமைப்பின் தலைவர் ஜெர்மன் அலி மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் நமதூரில் செயல்பட்டு வரும் 10 இறைச்சி கடைகளில் 8 கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு ஆட்டு இறைச்சியை விற்க ஒப்புக்கொண்டனர். இரண்டு கடை உரிமையாளர்கள் மட்டும் கூட்டமைப்பு நிர்ணயித்த விலையை ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர்.

எனவே முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு மட்டும் விற்கும் கடைகளில் இறைச்சியை வாங்குமாறும் இது நமது ஊரின் கண்ணியம் சார்ந்த விஷயம் என்பதால் 700 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் கடைகளில் ஆட்டு இறைச்சி வாங்க வேண்டாமென்று இன்று (22.5.2020) நடந்த அனைத்து முஹல்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரொனா தோற்றாள் ஊரடங்கு அமலில் இருப்பதால் நம்மால் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளியில் சென்று தொழுகையை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம்.

மேலும் உலமா சபை வக்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வருட நோன்புப் பெருநாள் தொழுகையை பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறும் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்

இப்படிக்கு
அனைத்து மஹல்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு, முத்துப்பேட்டை.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img