Thursday, March 19, 2026

தமிழகம் வந்ததா வெட்டுக்கிளிகள் ? கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி !

spot_imgspot_imgspot_imgspot_img

ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளை பாதித்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக தற்போது இந்தியா வந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து, அங்குள்ள விளைநிலங்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் முழித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்திலும் இந்த வெட்டுக்கிளிகள் வருமா என விவசாயிகள் தரப்பில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தற்பொழுது கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி கிராமத்தில் சில இடங்களில் செடிகளில் கூட்டம், கூட்டமாக வெட்டுக்கிளிகள் அமர்ந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்து இது தொடர்பான புகைப்படங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்த வெட்டுக்கிளிகள் பற்றி கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், இது தொடர்பாக நாளை ஆராய்ச்சி செய்து முடிவுகள் எடுக்கப்படும், அவை சாதாரண வெட்டுக்கிளிகளா அல்லது வடமாநிலத்திலிருந்து வந்தவையா என அதன்பின் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img