Thursday, March 19, 2026

பன்னூல் ஆசிரியர் அதிரை அஹ்மது மரணம்!MLAவின் இரங்கல் செய்தி….

spot_imgspot_imgspot_imgspot_img

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

பல்வேறு அறிஞர்களையும், அரசியலாளர்களையும், எழுத்தாளர்களையும் தந்த ஊர்களில் அதிராம்பட்டினத்திற்கு தனி இடம் உண்டு.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு நற்சிந்தனைகளை ஊட்டும் பல நூல்களை எழுதிய பெரியவர் பன்னூல் ஆசிரியர் அதிரை அஹமது அவர்களும் ஒருவர்.

இன்று அவர் காலமானார் என்ற செய்தி வருத்தத்திற்குரியது.

குறிப்பாக அதிராம்பட்டினம் மக்களுக்கு இது பேரிழப்பாகும்.

அவரது நூல்களை புதுப்பித்து ,அதிரையில் அவர் பெயரால் ஒரு நூலகம் அமைப்பதே அதிரை மக்கள் அவருக்கு செய்யும் மரியாதையாக அமையும்.

இதில் அதிரையை சேர்ந்த அனைவரின் ஆக்கங்களையும் பாதுகாக்கவும் ஒரு வாய்ப்பு உருவாகும். இதை அதிரை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அவரை இழந்து வாடும் அனைவரின் துயரிலும் மனிதநேய ஜனநாயக கட்சியும் பங்கேற்கிறது.

அவரது மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் பிரார்த்திப்போம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
31.05.2020

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img