Monday, December 15, 2025

அதிரைக்கு வந்த அரசு பேருந்து ! பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி !!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா நோயால் போடப்பட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்தை மத்திய மாநில அரசுகள் தடுத்து வைத்து இருந்தன.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் மத்திய அரசு சில தளர்வுகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்து உள்ளது.

இதன் அடிப்படையில் தமிழக அரசு 50℅ பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு இன்று காலை வந்த முதல் அரசு PP பேருந்தை அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், நகர அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளிவிட்டு வரவேற்றார்.

பின்னர் பேரூராட்சி ஊழியர்களால் பேருந்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பயணிகளை அனுமதித்தனர்.

பேருந்து இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதிக்கபடுவர் என்று, கூட்டமாக பேருந்தில் ஏற அனுமதியில்லை என நடத்துனரால் தெரிவிக்கப்பட்டதுடன், பயணிகள் கண்டிப்பாக வாய் மூக்கு கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் வாய் மூக்கு கவசம் இன்றி பேருந்துகளில் பயணிக்க அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் ஏறும்போதும் இறங்கும் போதும் பேருந்துகளில் வைக்கப்பட்ட சானிடைசர்களை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

முதல் நாள் என்பதால் போதிய பயணிகள் இன்றி காணப்பட்டது.

அதிரைக்கு பேருந்து வசதி கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img