Home » தமிழகத்தில் 10ம் வகுப்பு ஆல்பாஸ் – மாணவர்கள் உற்சாகம் !

தமிழகத்தில் 10ம் வகுப்பு ஆல்பாஸ் – மாணவர்கள் உற்சாகம் !

by admin
0 comment

தமிழகத்தில் வரும் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்வை நடத்தக்கூடாது, மாணவர்களின் பாதுகாப்பில் அரசு விளையாடக்கூடாது என தொடர்ந்து தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.

மேலும் நிலுவையில் இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், நிலுவையில் இருக்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter