கடந்த 5 தினங்களாக அதிரையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குளங்களில் நீர் வழிந்து சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலைகள் பெயர்த்து வைக்கப்பட்டிருப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அதிரையில் உள்ள குளங்கள் தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அதில் சில நாட்களுக்கு குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக குளத்திற்கு சிறுவர்கள் செல்வதை பெற்றோரும் அப்பகுதி பொதுமக்களும் கண்காணித்து தடுப்பதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். கொரோனா பெருந்தோற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் இந்த சூழலில் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் குழந்தைகளை நேரம் ஒதுக்கி கண்காணிக்க வேண்டியது பொருப்பாளர்களின் கடமையும் பொறுப்பாகும்.