Home » அதிரையில் PFI சார்பில் ரமலானை வரவேற்போம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி!(படங்கள்)

அதிரையில் PFI சார்பில் ரமலானை வரவேற்போம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி!(படங்கள்)

0 comment

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக அதிராம்பட்டினம் நகரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று 10.4.2021 மாலை 5:30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் உள்ள கதிஜா மஹால் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் ஜாவித் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் A.அபூபக்கர் சித்திக் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முகம்மது சேக் அன்சாரி ஆம்புலன்சை மக்களின் சேவைக்காக பொதுமக்கள் முன்னிலையில் அர்ப்பணித்தார்.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் A.தப்ரே ஆலம் பாதுஷா, தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகம்மது அஸ்கர், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் Er.N.மர்சூக் அஹமது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z.முகமது தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர செயலாளர் சம்சுதீன் நன்றி உரையாற்றினார். இதில் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter