Thursday, March 19, 2026

மதுக்கூரில் அ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் கிழக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்   துரைசெந்தில்(வயது56). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கு தொடர்பாக இவரை மதுக்கூர் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். 

இந்தநிலையில் துரைசெந்திலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து துரைசெந்திலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில் துரைசெந்தில் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img