Thursday, March 19, 2026

திருச்சி இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி!

spot_imgspot_imgspot_imgspot_img

பாஜக வணிக பிரிவு அமைப்பாளர் மீது நடவடைக்கை பாயுமா?

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் வேலைக் கேட்டு வந்த திருச்சியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர் சதீஸ்குமார் (34) என்பவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் பாஜக வணிகப் பிரிவு அமைப்பாளர் ராஜ மெளரியாவும் அவரது ஆட்களும். அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மேட்டுப்பாளையம் காவல்துறையினர் குற்றவாளிகள் மூவர் மீது இ.த.ச. 307 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பாஜக ராஜ மெளரியாவை கட்சியை விட்டு நீக்கி தன் கடமையை முடித்துக் கொண்டது.

அரசும் காவல்துறையும் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞரின் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும். உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img