அதிரை நகராட்சி வார்டு மறுவரையரையில் மக்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்களின் கண் அசைவுக்கு எதுவாக அவசர கதியில் வார்டுகள் பிரிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சில வார்டுகளில் மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் குளறுபடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சமீபத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் அதிரையை சேர்ந்த வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையரைக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை விசாரணைக்கு வருகிறது.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





