45ஆண்டு கால ஆளுமை, நகர நிர்வாகத்தில் முன் அனுபவம்,அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு என அத்தனையும் ஒருங்கே பெற்ற குடும்பத்தினர் இம்முறை உதயசூரியன் சின்னதில் போட்டியிடுகின்றனர்.
இதுகுறித்து மமீசெ குடும்ப நபர் ஒருவர் தெரிவிக்கையில், அதிரை நகர கட்டமைப்புக்கு எங்களின் முன்னோர்களான மறைந்த சுல்தான் அப்துல் காதர், அப்துல் வகாப் சாச்சா வரையில் அவர்கள் எடுத்த சிரத்தையுடன் கூடிய உழைப்பை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.
சாச்சாவின் மறைவிற்கு பின்னர்,தாம் பயணித்த கட்சி பாசிச சித்தாந்த கொள்கையை தூக்கி பிடித்த நேரத்தில் பதவிகளை உதரி தள்ளிவிட்டு சமுதாய நலன் ஒன்றே மேலானது என்று அக்கட்சியை விட்டு அரசியலே வேண்டாம் என ஒதுங்கி இருந்த நேரத்தில் சிலரின் வற்புறுத்தல் காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் எங்களின் குடும்ப நிர்வாகிகள் இணைத்து கொண்டனர்.
இந்த நிலையில் எங்களின் MMSA தாஹிரா அம்மாள் நகர் நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த பெண்மனி என்பதாலும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இம்முறை திராவிட முன்னேற்ற கழகத்தில் 10வது வார்டில் போட்டியிடுகிறோம் என்றும்,
எங்களின் கடந்த கால சேவைகள், இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்றால் எங்களின் முன்னோர்களின் ஊழலற்ற பணிகளே என்று சான்றளிக்கபடுவதாக தெரிவிக்கிறார்.