Sunday, February 1, 2026

அதிரை மார்க்கமாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் மக்கள் கோரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் 25/02/2022) ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் திரு.மனிஷ் அகர்வால் அவர்களுக்கு அதிரை ரயில் நிலையத்தில் பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.

சம்சுல் இஸ்லாம் சங்கம், ஐமஆத்துல் உலமா, அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, அதிரை திமுக, அதிரை SDPI, அதிரை தமுமுக, Adirampattinam Rural Development Association, Adirampattinam Passenger Welfare Association, United Foundation, Lions Club of Adirampattinam, Rotary Club of Adirampattinam ஆகிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு நேரடி எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட மதுரை, இராமேஸ்வரம், திருநெல்வேலி, எர்ணாக்குளம் போன்ற நகரங்களுக்கு அதிராம்பட்டினம் வழியாக ரயில்களை இயக்க வேண்டும் என்றும் அதிரை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அனைவரிடமும் கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட திருச்சி கோட்ட மேலாளர் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டார். அதிராம்பட்டினம் ரயில் சங்கம் சார்பாக திரு. அப்துல் ராஜக் அவர்கள் கோட்ட மேளாளர் அவர்களுடன் சென்று அனைத்து தேவைகளையும் எடுத்துரைத்தார். தேவைகளை ஒவ்வொன்றாக கேட்டரிந்த கோட்ட மேலாளர் அனைத்து கோரிக்கைகளையும் பரீசிலித்து அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.

மேலும் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலசங்கத்தின் தலைவர் திரு.ஜெயராமன் அவர்களும், செயலாளர் திரு.விவேகானந்தன் அவர்களும் அதிரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்து நமது திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகள் பற்றியும், கேட்கீப்பர் பணியமர்த்தல் முயற்சிகளைப் பற்றியும், விரைவு ரயில் தேவைகளைப் பற்றியும் விளக்கமளித்தார்கள்.

நமது ரயில் பாதை வழியாக ரயில்களை இயக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் திருச்சி கோட்ட மேலாளர், பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர், திருவாரூர் ரயில் பயணிகள் சங்கத்தினர், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்கத்தினர், அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து தன்னார்வ அமைப்புகள் , அனைவருக்கும் அதிராம்பட்டினம் ரயில் ஆர்வலர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img