Home » அதிரையில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை! உத்தரவு போட்ட ஆட்சியர்! தீயாய் வேலை செய்யும் ஆணையர்!!

அதிரையில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை! உத்தரவு போட்ட ஆட்சியர்! தீயாய் வேலை செய்யும் ஆணையர்!!

by அதிரை இடி
0 comment

தஞ்சாவூர் உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் நாளை மறுதினம் முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அதிரையில் நேற்றையத்தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூர்ந்து கிடக்கும் வடிகால்களை உடனடியாக தூர்வார நகராட்சி நிர்வாகத்திற்கு அவர், உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஜேசிபி-யை களத்தில் இறக்கிவிட்ட நகராட்சி ஆணையர் சசிகுமார், அனைத்து வடிகால்களையும் தூர்வாரி தடையின்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய ஊழியர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். இந்த பணிகளை மேஸ்திரி சந்தன செல்வம் தலைமையிலான ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter