தமிழகத்திலேயே அதிக வருவாய் கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக பட்டுக்கோட்டை தாலுகா உள்ளது. இதனிடையே அதிரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுவட்டார மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அதிரை, புதுபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் SDPI சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் பட்டுக்கோட்டை தாலுகாவை பிரித்து அதிரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. முன்னதாக நகராட்சி தேர்தல் அறிக்கையில் அதிரை தாலுகா வாக்குறுதியை SDPI தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





