அதிரை நகராட்சி பகுதிகளில் அகற்றப்படும் குப்பைகள் அனைத்து வண்டிப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இதனிடையே, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக கையாளாத காரணத்தால் குப்பை கிடங்கு நிறைந்து மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. குப்பைகள் தீயில் எரிவதால் ஏற்பட கூடிய நச்சுக்காற்றை அப்பகுதிவாசிகள் சுவாசிக்க கூடிய அவலமும் தொடர்கிறது. மேலும் அதிரை நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் எரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையோரமாகவும் கொட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க நகராட்சி மன்ற கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என SDPI 13வது வார்டு உறுப்பினர் பெனாசிரா அஜாருதீன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதத்தை நகராட்சி அலுவலரிடம் SDPI மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூத் தலைமையிலான நிர்வாகிகள் வழங்கினர்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





