173
அதிரை அரசினர் மகளிர் மேல்நிலையில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 123 மாணவிகள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 98% தேர்ச்சியை இந்த அரசு பள்ளி பெற்றுள்ளது. கொரொனா பேரிடர் காலத்திலும் மாணவிகளுக்கு தேவையான பயிற்சியை அரசு பள்ளி ஆசிரியர்கள்முறையாக அளித்ததாலேயே இந்த தேர்ச்சி சாத்தியமானதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். முன்னதாகபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 99% தேர்ச்சியை இதே அரசு பள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.