மாலத்தீவின் தலைநகர் மாலேயில் சற்றுமுன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது. எரிந்த கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் இருந்து தீ ஏற்பட்டதாகத் தெரிகிறது. தீயை அணைக்க நான்கு மணி நேரம் எடுத்ததாகத் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கொல்லப்பட்டவர்களில் இந்தியப் பிரஜைகள் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கிறது மேலதிக தகவல் பரிமாற்றத்திற்குத் தொடர்பு எண்களை அறிவித்து இருக்கிறது
+9607361452 / +9607790701