Home » அதிராம்பட்டினம் தாலுகா! கிளைவாய்க்கால்களை தூர்வாருக! எம்.எல்.ஏ-யிடம் கோரிக்கை!!

அதிராம்பட்டினம் தாலுகா! கிளைவாய்க்கால்களை தூர்வாருக! எம்.எல்.ஏ-யிடம் கோரிக்கை!!

by அதிரை இடி
0 comment

அதிரையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், சி.எம்.பி லைன் வாய்காலை புனரமைத்து கழிவுநீர் கலக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். மரைக்காயர் குளம் மற்றும் செழியன் குளத்திற்கு செல்லும் கிளைவாய்கால்களையும் புனரமைத்து தருவதுடன் ஏரிபுறக்கரை ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர் வடிகாலை முறையாக பராமரிப்பதுடன் அங்கு தரையைவிட தாழ்வாக உள்ள குறுக்கு பாலங்களையும் சீரமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் குலாம் ஜாம் அன்சாரி டிரஸ்ட் சார்பில் எம்.எல்.ஏயிடம் அளிக்கப்பட்ட மனுவில், அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அலுவலகம் அமைப்பதுடன் செல்லிக்குறிச்சி ஏரி மற்றும் நசுவினி ஆற்றை தூர்வாரி படகு சவாரி அமைத்து சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter