Tuesday, December 16, 2025

கம்பிகளை அறுத்து போட்ட அதிரை மின்வாரியம்! கெரண்ட் இல்லாமல் பரிதவிக்கும் அப்பாவிகள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணத்திற்காக இன்று காலை மின் தடை ஏற்படுத்தப்பட்டது. காலை 9மணி முதல் 5மணி வரை மின் தடை அமலில் இருக்கும் என சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருந்தன. ஆனால் அதில் குறிபிட்டப்படி 5மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் நோயாளிகள், சிறார்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பராமரிப்பு பணி என கூறி மின் தடை செய்யும் மின்வாரியம் சொன்ன கால அளவிற்குள் மீண்டும் மின் விநியோகத்தை துவங்காமல் காலம் தாழ்த்துவது தொடர் கதையாகி வருகிறது. திட்டமிடல், வேலை வாங்குதல் உள்ளிட்டவற்றில் இருக்கும் திறன் குறைபாடே இந்த அவலநிலைக்கு காரணம் என விவரம் அறிந்தவர்கள் குமுறுகின்றனர். இந்த விவகாரத்தில் மின் வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்த மாதமும் இதேநிலை தொடராமல் இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img