தமிழகத்தில் ஐந்தாம் சுற்று வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதலே கருமேகங்கள் சூழ வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 11.30 மணி முதல் மிதமான மழை அதிராம்பட்டினம் முழுவதும் பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.