நாட்டின் 75ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளைகள் சார்பில் நேற்று (18/01/2024) காலை 10 மணிமுதல் 2.30 மணிவரை, அதிரை கிளை-1 தவ்ஹீத் பள்ளிவாசலில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இம்முகாமை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் Dr. கிஷோர் மற்றும் இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் ஆகியோர் மருத்துவ குழுவுடன் இணைந்து நடத்தி கொடுத்தனர்.
மேலும் இம்முகாமில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று, உடல் தகுதி அடிப்படையில் 83 யூனிட் இரத்தம் தானமாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு TNTJ அதிரை கிளைகள் சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கிளை-1 நிர்வாகிகள் நசுருதீன், யாசர் அரபாத், இப்ராமூசா, சாகுல் ஹமீது, ஜாஃபர் சாதிக், முகமது ஜலால், முகமது இக்பால்,தவ்ஃபீக் உமர், ஹபீப் ரஹ்மான், அதிரை கிளை-2 நிர்வாகிகள் ஃபஜால் முகைதீன்,
அஹமது ஜலீல் அபூபக்கர், ஜமால் முகம்மது, ஃபைஸல் முகம்மது ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.