மக்களவை தேர்தல் 2024ன் தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படும் நிலையில் தமிழகத்தில் தொகுதி பங்கீடுகளை தொடர்ந்து தேர்தல் பணிகள் மும்புரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு குறித்து இன்று காலை திமுகவுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் இரண்டு தொகுதிகளில் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மக்களை தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அறிவித்துள்ளார்.