2011-16ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர்மன்ற தலைவராக இருந்தவர் எஸ்.எச்.அஸ்லம், தற்போது திமுக மாவட்ட பொருளாளராக உள்ளார். தனது பதவி காலத்தில் வீணாக கடலில் கலக்க கூடிய தண்ணீரை பம்ப்பிங் திட்டத்தை செயல்படுத்தி வறண்டு கிடந்த குளங்களுக்கு கொண்டுவந்ததன் மூலம் மக்களின் வரவேற்பை பெற்றார். இந்தநிலையில் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.