நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் சூழலில் ஆளும் பாஜக புதிய யுக்தியை கையாண்டு இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி அதிராம்பட்டினம் உள்ளிட்ட 14 மண்டலங்களுக்கான பொறுப்பாளர் ஒருவர் நேற்று அதிராம்பட்டினம் வருகை தந்துள்ளார்.
அவர் உள்ளூர் பாஜகவினரை தொடர்பு கொண்டு, அவர்களுக்கான அசைன்மெண்ட் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதாகப்பட்டது மத்திய அரசின் கீழ் சிறுபான்மையினர் மக்களுக்காக கொடுக்கப்பட்ட ஸ்கீம்களில் பயணடைந்த பயாணிகளுக்கு அவர்களின் மொபை எண்ணுக்கு அழைப்பு வரும் அதனை உறுதி செய்த பின்னர் என்றும், அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று மத்திய அரசின் திட்டத்தின் பலன் குறித்து விளக்கம் கேட்கப்படும் அதன் பின்னர் பயணாளிகளின் மொபைலில் இருந்து குறிப்பிட்ட ஒரு நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் இனி வரும் காலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த குறுஞ்செய்தி வரும் என தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் அதிரை நகரில் மட்டும் இதுவரை 60வீடுகளுக்கும் மேலாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டதாக தெரிய வருகிறது.