இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும்.
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2024 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில் ஜப்பான் நாட்டில் பிறை பார்க்கப்பட்டு பிறை தென்படாததை முன்னிட்டு தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹிலால் கமிட்டி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி நாளை மறுநாள்(12/03/2024) முதல் நோன்பு என்றும் நாளை இரவு ஜப்பான் மக்கள் தராவீஹ் தொழுகையில் ஈடுபடவேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.