தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு 12வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிரையில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் தற்பொழுது வாய்க்கால் தெரு பகுதிகளிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் கழிவு நீர் கால்வாயில் நீர் திறந்துவிடப்பட்டு வடிகால் சரியான முறையில் அமையப்பெற்றதா என்று சோதனை செய்தனர். அந்த சோதனை ஓட்டத்தில் நீர் சரியான முறையில் அந்த கால்வாயில் ஓடியதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கால்வாயின் மூலம் அப்பகுதியில் மழை நீர் வடிந்து ஓடுவதற்கான ஆதாயம் உள்ளதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி இந்த பணிகளை துரிதமாக முடிவடைய மேற்பார்வையிட்டு வரும் 12வது வார்டு கவுன்சிலர் ராலியா சைபுதீனை பாராட்டி வருகின்றனர்.