அதிரை புதுத்தெரு சின்ன தைக்காலில் புதிதாக பெண்களுக்கு என தனி தொழுகை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பாத்திமா (ரலி) பெண்கள் தொழுகை கூடம் மற்றும் பெண்கள் மக்தப் மதரஸா என்கிற பெயரில் துவக்கப்பட்டிருக்கும் இந்த தொழுகை கூடம் முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8.30 மணிக்கு இஷா தொழுகையுடன் திறப்படும் இந்த தொழுகை கூடத்தில் ஐந்து வேலை தொழுகையும் ரமலானில் தராவிஹ் தொழுகையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நமதூர் பிலால் நகர் பகுதியில் இதேபோல் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் பெண்களுக்கென தனி இஸ்லாமிய பயிற்சி கூடத்தில் தொழுகை நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது புதிதாக மேலும் ஒரு பெண்களுக்கான தனி தொழுகை கூடம் அமைந்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.