தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் அதிமுக சார்பில் இஃப்தார் விருந்து நேற்று சென்னையில் நடத்தப்பட்டது.
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற இஃப்தார் விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹமது அய்யூப் பங்கேற்றார்.
மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி, மஜக சார்பில் ஹாரூன் ரஷீத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.