தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவந்த அரசு பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நிறுத்திய பேருந்து சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனிடையே கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் பேரூர்மன்ற தலைவர் S.H.அஸ்லம் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவையை அரசு மீண்டும் துவக்க கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ்ன் முதன்மை ஆசிரியர் ஹசன் சமீபத்தில் சென்னையில் உள்ள பல்லவன் விடுதியில் அதிரை சென்னை வழித்தடத்தில் பேருந்து சேவை மீண்டும் வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.
இந்நிலையில், அதிரை மக்களின் பல நாள் கோரிக்கையை ஏற்ற
இன்று முதல் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி புதிய குளிரூட்டப்பட்ட அரசு பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது. இந்த சேவையை இன்றிரவு 7.15 மணிக்கு பட்டுக்கோட்டையில் நடைபெறும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைக்க இருக்கிறார்.