நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு வேட்டையில் ஈடுபட ஆயத்தமாகின்றனர்.தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு, திமுக அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்கி உள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில்.தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு ஹிமாயூன் கபீர்ரை நியமித்து இருக்கிறது நாதக.
இவருக்கு மாற்று வேட்பாளாராக நாதகவின் அதிரை ஜியாவுதீன் நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருக்கிறது.வேட்புமனு பரிசீலனையில் ஹுமாயூன் கபீர் தகுதி நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டால் ஜியாவுதீந்தான் தஞ்சை வேட்பாளராக களமிறங்க நேரிடும் என கூறப்படுகிறது.அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு மாற்று வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய வைப்பது அரசியல் கட்சிகளின் வாடிக்கை அதன்படியே நாதகவும் அதிரை ஜியாவுதீனை மாற்று வேட்பாளராக அறிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.