Wednesday, March 18, 2026

அதிரை: இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரில் நகராட்சி கட்டிடத்திற்கு இஸ்லாமியரின் பெயரை வைக்காமல் உ.பியிலா வைக்க முடியும் – அதிமுக!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய நகராட்சிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து இன்றைய நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக அதிமுக ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு மறைந்த கண்ணியம்மிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரையோ அல்லது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரையோ வைக்க வேண்டும் என போர் கொடி தூக்கி வெளி நடப்பு செய்துள்ளனர் அதிமுகவின் உறுப்பினர்களான சேதுராமன்,ராக்கப்பன்,நான்சிபிச்சை ஆகியோர்கள்.

இதுகுறித்து நகர அதிமுக செயலாளர் அவர்களை அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபர் தொடர்புகொண்டு கேட்டபோது, இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் ஊரில் இஸ்லாமியரின் பெயரை வைக்க முடியவில்லை என்றால், உத்திரபிரதேசத்திலா வைக்க முடியும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img