அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும், ஆரம்ப சுகாதார நிலையம் அறவே இல்லாத நகரமாக திகழ்கிறது.
கற்பினி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைவது என்றால் வயிற்றை கையால் தாங்கி செல்லும் நிலை அந்தளவுக்கு சாலைகள் மோசம்.
நகராட்சி அந்தஸ்த்து பெற்ற ஓரு ஊருக்கே இந்த நிலைமையா? என கொதித்த காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் துறை தலைவர் மாலிக் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில், அதிராம்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், பகுதி நேர மருத்துவமனையாக உள்ள அரசு மருத்துவமனையை 24மணி நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார்.








