தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 2,548 கோடி ரூபாய் 🏛மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுபோல் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தனித்தனியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2009 முதல் 2014 வரை தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், 2018 – 19ம் நிதியாண்டில் 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 190 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிட வேண்டியவை. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 48 கி.மீ. தூர ஓசூர்- பயப்பனஹள்ளி (பெங்களூர்) இரட்டை அகல 🛤ரயில் பாதை திட்டத்துக்கு ரூ. 376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ஏற்கெனவே கிடப்பில் போடப்பட்டுள்ள, மற்றும் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.
More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய...





