தமிழக முழுவதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மற்றும் மத்திய மாநில அரசைக் கண்டித்து பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பாக போராட்டம் ஆர்ப்பாட்டம் வெடித்து வருகிறது.
இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தோழமை கட்சிகள் ஒன்று இணைந்து மத்திய மாநில அரசை கண்டித்து இன்று(23/04/18) தஞ்சாவூரில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மறுமலர்ச்சி திமுக பொது செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் அதிரை நசுருதீன், திமுகவை சேர்ந்த பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமின்றி, இந்த போராட்டம் தமிழக முழுவதும் திமுக தலைமையில் தோழமை கட்சிகள் இணைந்து இன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை மனிதசங்கிலி போராட்டத்தில் கைகளை கோரத்தப்படி அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.