அதிரை எக்ஸ்பிரஸ்:- முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பாக இருக்கும் என சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வரில் முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அவரின் ட்விட்டர் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், உண்மைக்கு ஆதரவாக இருக்காமல், வகுப்புவாத வன்முறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பசுவை கடத்திச் செல்கிறார் என நினைத்து ஆல்வார் அருகே ஒரு முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் அடித்துக்கொலை செய்துள்ளது. ஆனால், பாஜகவினரோ அப்பாவிகளை அடித்துக்கொல்லும் நிகழ்வுகள் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இதைப் பார்க்கும் போது, ஒரு முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று தெரிவித்துள்ளார்.