Monday, December 15, 2025

ஐம்பொன் சாமி சிலையை மீட்ட இஸ்லாமியர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாச்சிக்குளத்தில் முஸ்லிம்கள், தேவர்கள், தலித்துகள் என அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து வருகிறார்கள்.

நாச்சிகுளம் அடுத்த சிறுபனையூர் கிராமத்தில் கடந்த (04-08-18) ம் தேதி சாகுல் ஹமீது (வயது 70) என்பவருடைய மீன் பிடி குளத்தில் தண்ணீர் வற்றியது.

அன்றைய தினம் தண்ணீர் மேலும் குறைந்ததால் சேற்றில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது.

இதனைக் கண்ட சாகுல் ஹமீது அதை பிரித்துப் பார்த்தார். அப்போது அதில் ஐம்பொன் சிலை இருப்பது தெரிய வந்தது. இதனால் வருவாய் ஆய்வாளருக்கும், காவல் துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தார்.

இதன் பின்னர் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளரிடம் ஐம்பொன் சிலையை சாகுல் ஹமீது ஒப்படைத்தார்.

தமிழகத்தில் ஆங்காங்கே சிலை கடத்தல்காரர்கள் உலா வரும் நிலையில், ஒரு இஸ்லாமிய பெரியவர் சாமி சிலையை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது மகிழ்ச்சியையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியதால் சாகுல் ஹமீதை பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img