Wednesday, February 4, 2026

அமீரகத்தில் 31 லட்சம் அபராதம் பெற்ற இங்கிலாந்து பெண்….!

spot_imgspot_imgspot_imgspot_img

துபாய் என்றாலே மனதுக்கு ஞாபகம் வருவது வானுயர கட்டிடங்களும், வீதியில் வலம் வரும் விலை உயர்ந்த சூப்பர் கார்களும்தான். துபாய் காவல் துறையினருக்கு கூட புகாட்டி, லம்போர்கினி என அதிவேக கார்கள் துபாய் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் லம்போர்கினி காரை கார்களை வாடகைக்கு விடும் ஒரு நிறுவனத்திலிருந்து 2 நாட்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு (இந்திய மதிப்பில்) வாடகைக்கு எடுத்துள்ளார்.

இரண்டாம் நாள் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்ற அந்த சுற்றுலாப் பயணி காரை 360 கோணத்துக்குச் சுற்றி ‘ஸ்பின்’ என்ற சாகசம் வேறு செய்துள்ளார். இது சாலைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது.

துபாயின் ஷேக் சையது மற்றும் கார்ன் அல் சப்கா உள்ளிட்ட சாலைகளில் 125 கி.மீ முதல் 230 கி.மீ வேகத்தில் அவர் லம்போர்கினி காரை ஓட்டியுள்ளார். இதனால் அவரை தேடிப் பிடித்த துபாய் போலீசார், அந்த காரை வாடகைக்கு விட்ட நிறுவனத்தின் பேரில் 31 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து 31 லட்ச ரூபாய் அபராத பணத்தை, சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணி செலுத்த மறுத்ததால், காரை வாடகைக்கு விட்ட அந்நிறுவனம் அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றி வைத்திருக்கிறது. மேலும் இது குறித்து இங்கிலாந்து தூதரகத்தை தொடர்பு கொண்டு தகவலும் தெரிவித்துள்ளது.பாஸ்போர்ட்டை கொடுக்கும் வரை காரை ஒப்படைக்க முடியாது என அந்த சுற்றுலாப் பயணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். துபாய் வரலாற்றிலேயே வேகமாக கார் ஓட்டிய குற்றத்துக்காக 31 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img