Sunday, February 1, 2026

வாஜ்பாய் மறைவு … தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 7 நாட்கள் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசின் நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

வாஜ்பாயின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசும் அறித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை (16-08-2018) தமிழகத்தில் அரசு விடுமுறை என்றும் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி , கர்நாடகம் , மத்திய பிரதேசம் , பஞ்சாப் , ஜார்கண்ட் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாஜ்பாயின் மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img