Sunday, March 22, 2026

முறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் ! நடவடிக்கை எடுக்கப்படுமா ?

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் மழைநீரானது, பேருந்து நிலையம் முழுவதும் தேங்கி கிடக்கிறது.

அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இவ்விஷயத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் விரைந்து செயல்பட்டு, பேருந்து நிலையத்தில் முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img