Saturday, March 21, 2026

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சிங்கப்பூரில் தற்கொலை..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அடுத்துள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலைவானன் வயது 32 இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் ஏற்படுத்திய கஜா புயலின் கோர தாக்குதலால் தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாயங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கலைவாணனுக்கு சொந்தமாக உள்ள பல தென்னைகளும் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாடு சென்ற கலைவாணன் அந்த கடனை திருப்பிக் கொடுக்கமுடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார்.மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயத்தையும் கண்டு இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் தனது அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார் .அதனை தொடர்ந்து அவரது உடல் இன்று சொந்த ஊரான திட்டக்குடி கொண்டு வரப்படவுள்ளது. விவசாயி தற்கொலை சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img