Monday, March 23, 2026

உயர்சாதி வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி அதிரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி எதிரே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இன்று (20.1.2019) ஆர்ப்பாட்டம்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி சிறப்பு சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ஏற்கனவே 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்குக் கூடுதலாக 10% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 60% அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் மீண்டும் உயர்சாதி வகுப்பினரே பலனடையக் கூடும் என்ற ரீதியில் இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகள்,அமைப்புகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செந்தலை ரியாஸ் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img