அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 22/04/2019 அன்று துவங்கப்பட்டு அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முன்றாம் நாள் ஆட்டமாக இன்று (24/04/2019)இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் ராம்நாடு B அணியினரும் மற்றும் தஞ்சாவூர் அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த ராம்நாடு B அணி 20 ஓவர்களில் 132ரன்கள் குவித்தனர் பின்னர் 133 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தஞ்சாவூர் அணியினர் வெற்றி இலக்கை 14.2 ஒவர்களில் அடைந்தனர்.
பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ராம்நாடு A அணியினரும் TLCC பட்டுக்கோட்டை அணியினரும் மோதினர். இதில் நானையம் சூழற்ச்சியில் வெற்றி பெற்று மட்டை பணியினை தேர்வு செய்தனர் இதில் ராம்நாடு அணியினர் நிர்னியிக்கப்பட்ட 20 ஒவர்களில் 168 ரன்கள் குவித்தனர் பின்னர் 169 என்ற இலக்குடன் களமிறங்கிய TLCC அணியினர் 138 ரண்கள் எடுத்தனர் 30 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
நாளைய தினம் நடக்க இருக்கும் ஆட்டங்கள்: முதலாவது போட்டியில் சச்சின் பிரதர்ஸ் காரைக்கால் அணியினரும் மற்றும் திருவோணம் அணியினர் இரண்டாவது ஆட்டமாக காலையில் வெற்றி பெறும் அணியினரோடு ஜனா பாய்ஸ் கும்பகோனம் அணியினர் விளையாட உள்ளனர்