Thursday, May 2, 2024

அதிரை: மின்வாரியமும் BSNLலும் கூட்டு சதி !! நுகர்வோரின் புகார்களை புறக்கணித்து வருவதாக புகார் !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கி வருகிறது மின் வாரிய அலுவலகம், அதிராம்பட்டினம் பொதுமக்களின் பொருளாதாரத்தில் வாங்கப்பட்ட இந்த இடத்தில் தான் 33KV துணை மின் நிலையமும் இயங்கி வருகிறது .

இந்நிலையில் அதிரையில் ஏற்படும் மின் தடை உள்ளிட்ட புகார்களை தொலைப்பேசி வாயிலாக தெரிவிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த மூன்று மாதங்களாக மின் வாரிய தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மின் வாரிய அதிகாரிகளோ, பிஎஸ்என்எல் நிர்வாகமோ கண்டுகொள்வதாக தெரியவில்லை .

இதனால் மின் நுகர்வோர் தங்களது புகார்களை மின் வாரியத்திற்கு தெரிவிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து அதிரை மின் வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்த வகையில், மின் வாரியத்தின் சார்பில் தொலைபேசி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டு விட்டது என்றும், புகார் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது .

இது குறித்து அதிரை தொலைபேசி இணைப்பக அதிகாரிகளிடம் எமது செய்தியாளர் விசாரித்த வகையில் ….

தொலைப்பேசி பழுது குறித்து எந்த புகாரும் அதிராம்பட்டினம் BSNL அலுவலகத்திற்கு வரவில்லை என இணைப்பக அதிகாரி தெரிவித்து உள்ளார்.

நுகர்வோருக்கு சேவை செய்ய வேண்டிய மின் வாரியமோ மெத்தன போக்காக உள்ளது குறித்து பொதுமக்கள் ஆதங்கத்தில் உள்ளனர் .

உயரதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் முன் நிர்வாக பழுதை நீக்கிக்கொள்ள அதிரை மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

செய்வார்களா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...